வால்பாறையில் சமுதாய வளைகாப்பு விழா - 60 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு சீர்

கோவை வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள 60 மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து தட்டு சீர் வழங்கப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சமூக நலத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.



வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்தநிகழ்ச்சியில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இணைந்து இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் குழந்தை பெறும் காலங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறு உணவருந்த வேண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.



மேலும் அவர்களுக்கு வளையல் அணிவித்து, பொட்டு வைத்து, தட்டு சீர் வழங்கப்பட்டது.

இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரதி பிரியா, திட்ட ஒழுங்கிணைப்பாளர் அனீஸ் குமார், மேற்பார்வையாளர் நாகஜோதி மற்றும் திலகவதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...