'உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்..!' - கோவை ஏர்போர்ட்டில் மாணவர்கள் நாடகம்!

கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவர்கள், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை விமான நிலையத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த நாடகம் விமான நிலைய பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறுகையில், கோவை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முகபாவனை நாடகம் நடத்தி வருகிறோம். பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், தோல் உறுப்பு தானம் செய்ய வேண்டும், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனற்.



நிகழ்ச்சியின் முடிவில் கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், கல்லூரி மாணவர்களை பாராட்டினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...