கோவையில் ஹெல்மெட் அவசியத்தை உணர்த்த தன்னார்வல அமைப்புடன் கைகோர்த்த காவல்துறை

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் முன்பு சோதனை சாவடி அமைத்து உயிர் அறக்கட்டளை கூட்டமைப்புடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


கோவை: கோவையில் தன்னார்வல அமைப்புடன் போலீசார் இணைந்து தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்தனர்.

கோயம்புத்தூர் நகரக் காவல் துறையினர், சாலை விபத்துகளைக் குறைக்கும் முயற்சியாகவும், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயிர் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, நகரில் 100% ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.



இது ஒரு புதிய முயற்சியாக இல்லாவிட்டாலும், அதன் நோக்கம் வாரத்திற்கு ஒருமுறை, போக்குவரத்து போலீசார், கல்லூரி மாணவர்கள் மற்றும் உயிர் அமைப்புடன் இணைந்து, அந்தந்த கல்லூரி முன்பு சோதனை சாவடி அமைத்து, வாகனங்கள் செல்வதைக் கண்காணிக்கின்றனர்.

இந்த சோதனையின் போது ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையிலும், ஹெல்மெட் அணிவது குறித்து தன்னார்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மறுபுறம் காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் அத்துமீறி நுழைபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் முன்பு உயிர் கூட்டமைப்புடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவரக்ள மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை தவிர குனியமுத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...