கோவை ரயில் நிலையத்தில் குவியும் வடமாநில தொழிலாளர்கள் - சொந்த ஊருக்கு பயணம்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்தியை அடுத்து கோவை ரயில் நிலையத்திலிருந்து பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வமாநிலத்தவர்களை தாக்கும் பொய்யான வீடியோ வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது கோவையில் ஜவுளித்துறை, தொழில்துறை உள்ளிட்டவற்றில் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்துவிட்டு ஒரு சில வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கே செல்கின்றனர்.



பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் கோவை ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.



கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநில தொழிலாளர்களிடம் கோவை மாநகர காவல் ஆணையாளர் அறிவுரையின் பேரில், அவர்களிடம் காவலர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.



இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், தாங்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் செல்கிறோம். இங்கு அமைதியாக தான் உள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்களால் ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், அச்சத்தால் தங்களை புறப்பட்டு வரும்படி நிர்ப்பந்திப்பதாகத் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வடமாநில தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப்படும் எனச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...