வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் பறிப்பு - போத்தனூர் போலீசார் விசாரணை

கோவை போத்தனூர் பகுதியில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ், ராஜூ ஆகியோரிடம் செல்போன் மற்றும் பணத்தைப் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களிடம் செல்போனை பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ் , ராஜூ ஆகிய இருவரும் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் 2 வாலிபர்கள் பரதல்தாஸை அடித்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துத் தப்பிச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் ஒரு காரில் அந்த வழியாக அந்த நாலு பேர் ராஜுவை தாக்கி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ.400 பணத்தைப் பறித்து தப்பி சென்றனர்.

இது குறித்து வடமாநில தொழிலாளர்களின் நிறுவன உரிமையாளர் மோகன்ராஜ் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...