கோவை போத்தனூர் பகுதியில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ், ராஜூ ஆகியோரிடம் செல்போன் மற்றும் பணத்தைப் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை: போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களிடம் செல்போனை பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ் , ராஜூ ஆகிய இருவரும் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் 2 வாலிபர்கள் பரதல்தாஸை அடித்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துத் தப்பிச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் ஒரு காரில் அந்த வழியாக அந்த நாலு பேர் ராஜுவை தாக்கி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ.400 பணத்தைப் பறித்து தப்பி சென்றனர்.
இது குறித்து வடமாநில தொழிலாளர்களின் நிறுவன உரிமையாளர் மோகன்ராஜ் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
கோவை போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ் , ராஜூ ஆகிய இருவரும் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் 2 வாலிபர்கள் பரதல்தாஸை அடித்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துத் தப்பிச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் ஒரு காரில் அந்த வழியாக அந்த நாலு பேர் ராஜுவை தாக்கி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ.400 பணத்தைப் பறித்து தப்பி சென்றனர்.
இது குறித்து வடமாநில தொழிலாளர்களின் நிறுவன உரிமையாளர் மோகன்ராஜ் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.