காஸ் சிலிண்டர் விலையை கண்டித்து பொள்ளாச்சியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாடையில் சிலிண்டரை வைத்துக் கட்டியும், பட்டை, நாமம் போட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில் காஸ் விலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக் கிளை சார்பில், காஸ் விலை உயர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், காஸ் சிலிண்டருக்கு வழங்க வேண்டிய மானியத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து, இப்போது மானியமே வருவதில்லை என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.



இதைத் தொடர்ந்து சிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டும், பாடைகட்டியும் நூதன முறையில் மத்திய அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி நகரக் கட்சி கிளையில் உறுப்பினர் சசிதரன் தலைமை தாங்கினார்.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயச் சங்கம் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...