தாராபுரத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் - விரைவில் திறக்க கோரிக்கை

தாராபுரத்தில் ரூ.2.20 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் பார்வையிட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், இந்த மையத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டடம் தாராபுரம் வசந்தம் நகரில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இதில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை துறை அலுவலகம், வேளாண் பொறியியல் அலுவலகம், வேளாண் வணிக அலுவலகம் உள்பட அனைத்தும் விவசாய துறைகளும், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் செயல்பட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடங்களை உடனடியாக திறப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது பயிர்கள் தொடர்பாக உள்ள சந்தேகங்களை போக்கவும், தொழில்நுட்ப வசதியை பெறவும், வேளாண் இடுப்பொருட்களை பெறவும், ஒரே இடத்தில் அனைத்து தேவைகளையும் பெற இயலும். கட்டிட பணிகள் முடிவடைந்து ஆறு மாதங்கள் ஆனநிலையில் வேளாண்மை மையத்தை திறக்க இதுவரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் அலங்கயம் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில தலைவர் ஏ.காளிமுத்து மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர், “ விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனரிடம் ஆலோசனை பெற்று இடுபொருட்களை பெற்றுக்கொண்டு மீண்டும் வேளாண்மை பொறியியல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் கவுண்டச்சிபுத்தூர் ஊராட்சியில் சேரன் நகரில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, விவசாயிகள் நலக்கருதி, காலம் தாழ்த்தாமல் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

Newsletter

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...