உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படம் வெளியீடு - தாராபுரத்தில் திமுகவினர் கொண்டாட்டம்

தாராபுரம் திரையரங்குகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று வெளியானது. நகர திமுக இளைஞரணி சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் கொடுத்தும் கொண்டாடினர்.



திருப்பூர்: தாராபுரம் திரையரங்குகளில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "கண்ணை நம்பாதே" திரைப்படம் இன்று வெளியானது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "கண்ணை நம்பாதே" திரைப்படம் இன்று வெளியானது.



இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



இந்நிலையில் தாராபுரம் சக்தி சினிமா எஸ்.வி.ஆர் திரையரங்கில் இப்படம் வெளியீட்டு விழா கொண்டாட்டங்கள் நடந்தது.



இதில், நகர திமுக இளைஞரணி சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் கொடுத்தும் கொண்டாடினர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...