துபாயில் இருதய நோயால் ஒரு வருடமாக அவதிப்பட்டு வந்த ஏசி மெக்கானிக் தமிழக அரசின் நடவடிக்கையால் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: துபாயில் இருதய நோயால் தவித்து வந்த நபர் அரசின் நடவடிக்கையால் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுக்கரை முஸ்லிம் காலனியை சேர்ந்தவர் பைரோஸ் கான் நவாப் ஜான்(43). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு சென்று ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய கோளாறு மற்றும் மூளை ரத்தக் கசிவு நோயால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், பொருளாதார ரீதியாக தொடர்ந்து சிகிச்சை பெற முடியாததால் இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து தமிழகத்தில் தனது சொந்த ஊரில் சிகிச்சை பெற விரும்பியதாக கூறப்படுகிறது.
இந்திய தூதரக அலுவலக நண்பர் மூலம் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபி கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக அமைச்சர் உதயநிதியிடம் துபாயில் சிகிச்சை பெற்று வரும் நபரை தமிழகத்திற்கு அழைத்து வர உதவி செய்யும் படி சுபி கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி உத்தரவின் பேரில் பொதுத்துறை மற்றும் சுகாதாரத் துறை துபாய் நாட்டில் இருந்து அவரை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழக அரசின் உடனடி நடவடிக்கையால் இன்று காலை பைரோஸ் கான் விமான மூலம் கொச்சி வந்தடைந்தார். கொச்சி விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது தாய் தந்தை மற்றும் மனைவி தம்பி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இருதய நோயால் பாதிக்கப்பட்ட பைரோஸ் கான் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுக்கரை முஸ்லிம் காலனியை சேர்ந்தவர் பைரோஸ் கான் நவாப் ஜான்(43). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு சென்று ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய கோளாறு மற்றும் மூளை ரத்தக் கசிவு நோயால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், பொருளாதார ரீதியாக தொடர்ந்து சிகிச்சை பெற முடியாததால் இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து தமிழகத்தில் தனது சொந்த ஊரில் சிகிச்சை பெற விரும்பியதாக கூறப்படுகிறது.
இந்திய தூதரக அலுவலக நண்பர் மூலம் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபி கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக அமைச்சர் உதயநிதியிடம் துபாயில் சிகிச்சை பெற்று வரும் நபரை தமிழகத்திற்கு அழைத்து வர உதவி செய்யும் படி சுபி கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி உத்தரவின் பேரில் பொதுத்துறை மற்றும் சுகாதாரத் துறை துபாய் நாட்டில் இருந்து அவரை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழக அரசின் உடனடி நடவடிக்கையால் இன்று காலை பைரோஸ் கான் விமான மூலம் கொச்சி வந்தடைந்தார். கொச்சி விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது தாய் தந்தை மற்றும் மனைவி தம்பி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இருதய நோயால் பாதிக்கப்பட்ட பைரோஸ் கான் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.