வாயில் காயத்துடன் மீட்கப்பட்ட பெண் காட்டுயானை - பொள்ளாச்சியில் சிகிச்சை பலனின்றி பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியார் முகாமில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வன சரகம் ஆதிமாதையனூர் பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வந்த சுமார் 15 வயதுமிக்க பெண் காட்டு யானை டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியார் வனத்துறை யானைகள் பயிற்சி மையத்திற்கு கடந்த 17ம் தேதி இரவு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டது.



இரண்டு தினங்களாக யானைக்கு வன கால்நடை மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில தினங்களாக உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்த யானைக்கு மருத்துவர்கள் குளுகோஸ் போன்ற மருந்துகள் செலுத்தி வந்தனர்.



ஆனால், சோர்வுடனே காணப்பட்ட பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கால்நடை மருத்துவக் குழுவினர் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலரும் ஆனைமலை புலிகள் காப்பக கலை இயக்குனருமான ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...