கோவை விமான நிலையத்தில் ஆபத்துக் கால தடுப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் முன்னிலையில், ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கோவை விமான நிலையத்தில் ஆட்சியர் முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் (கடத்தல் எதிர்ப்பு மாக்) மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆபத்து (ஹைஜாக்கிங்) ஏற்படும் பொழுது எவ்வாறு செயல்படுவது, மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தல், தீவிரவாத நிகழ்வுகள் ஏற்படும் போது அதனை எவ்வாறு எதிர்கொண்டு பொது மக்களையும் பயணிகளையும் பாதுகாப்பது, மறைந்திருந்து குற்றவாளிகளை தாக்குவது, ஆபத்துக் காலங்களில் எவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொள்வது, மோப்ப நாய்களை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.



இதில் CISF காவலர்கள் 135 பேர், AAIயை சேர்ந்த 15 பேர், BCAS யை சேர்ந்த 1 நபர், ATC யை சேர்ந்த 7 பேர், FIRE/AAI யை சேர்ந்த 4 பேர், BDDS போலிஸ் 10 பேர், மாநில காவல்துறையினர் 6 பேர் உட்பட 213 பேர் பங்கேற்றனர்.



இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும் விமான நிலையத்தில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், விமான போக்குவரத்து பாதுகாப்பு துணை இயக்குனர் சச்சின் தேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...