கோவையில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை

கோவை நல்லாம்பாளையத்தில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டன் 6வது வீதியில் குடியிருந்து வருபவர் சுரேஷ்குமார். வழக்கறிஞரான இவர், தனது மனைவி மகள் ஆகியோருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மூகாம்பிகா கோவில்களுக்கு சென்றனர்.

அப்போது, வீட்டின் மேல் புறம் குடியிருக்கும் வாட்ச்மேன் செடிகளுக்கு தண்ணீர் மற்றும் இரவு நேரங்களில் பார்த்துக் கொள்ள காம்பவுண்ட் கேட்டின் சாவியை கொடுத்து சென்றதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், வாட்ச்மேன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது முன்புற கிரில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், மேலும் வீட்டின் உள்ளே உள்ள மெயின் கதவு திறந்து கிடப்பதையும் பார்த்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக, உறவினர்களுக்கு தகவல் சொல்லி போலீசாருடன் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு ஒரு சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைகளை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...