பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை - கவுண்டம்பாளையம் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பழனிக்கு தீர்த்தக்காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையோடு பாத பூஜை செய்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.



பல்லடம்: பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை செய்து கவுண்டம்பாளையம் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பன்னிரண்டார் தீர்த்தக்காவடி குழுவின் சார்பில்114 தீர்த்தக் காவடியுடன் 11 நாட்கள் பாதயாத்திரையாக பெருந்துறை, ஊத்துக்குளி வழியாக பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு வந்தடைந்தனர். தீர்த்த காவடி உடன் பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு கவுண்டம்பாளையம் ஊர் மக்கள், மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.



கவுண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் வரை கோமாளி வேடமணிந்து, நடனம் ஆடியபடி பக்தர்களை ஊர்மக்கள் அழைத்துச் சென்றனர். இரவு மாகாளியம்மன் கோவிலில் தீர்த்த காவடிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. ஓய்வுக்காக கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் இரவு தங்கினர்.



இன்று மீண்டும் தீர்த்தக்காவடிகளுடன் தாராபுரம் வழியாக சித்திரை 1ஆம் தேதி பழனி முருகன் கோவிலை சென்றடையும்படி பாதயாத்திரையை பக்தர்கள் தொடங்கினர். 114 தீர்த்தக்காவடியுடன் பக்தர்கள் வரிசையாக பாதயாத்திரை வந்த நிகழ்வு காண்போரின் கண்களை கவர்ந்தது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...