உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர்: உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ராகவேந்திர சாமி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சில வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.

இதில் வட்ட சட்டப்பணிகள் குழு பட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவாணி, தம்பி பிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையபயிற்சி ஆசிரியர் ரமேஷ், உடற்பயிற்சி ஆசிரியர் சண்முகம் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ராகவேந்திர சாமி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சில வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.
இதில் வட்ட சட்டப்பணிகள் குழு பட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவாணி, தம்பி பிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையபயிற்சி ஆசிரியர் ரமேஷ், உடற்பயிற்சி ஆசிரியர் சண்முகம் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.