கோவையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் கடந்த மார்ச் 23ஆம் தேதி ஆசிட் வீசியதில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டுள்ளது.


கோவை: நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சால் படுகாயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்த கவிதா என்பவர் மீது அவரது கணவர், ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரித்த கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு நீதிபதி சிவா, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் படி இடைக்கால இழப்பீடு நிவாரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...