தலைமை செயலக வாசல் முன்பு சீருடையில் தலைமை காவலர் தனது மகளுடன் திடீர் சாலை மறியல்!

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தனது மகளின் வலது கால் பாதிக்கப்பட்ட நிலையில், தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை செயலகம் வாயில் முன்பு தலைமை காவலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



சென்னை: சென்னை தலைமைச் செயலகம் வாசலில் சீருடையில் இருந்த தலைமை காவலர் தனது மகளோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவருக்கு பிரதீக்‌ஷா என்ற 10 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில், பிரதீக்‌ஷா தனது 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology)காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்‌ஷாவின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதீக்‌ஷாவுக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதத்திற்கு ரத்தம் செல்லாமல் கருப்பு நிறமாக மாறியதுடன் உடலில் உள்ள ரத்தம் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது.

மேலும் தங்கள் அனுமதியின்றி ரத்த சுத்திகரிப்பு (Dialysis)செய்யப்பட்டதன் விளைவால் வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.



எனவே இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி கோதண்டபாணி பாதிக்கப்பட்ட தனது மகளுடன் தலைமை செயலக வாயில் முன்பு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



தலைமை காவலரின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக தலைமை செயலகம் வெளியே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...