பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் வாலிபர் தற்கொலை - கிரிக்கெட் சூதாட்டம் காரணமா?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரபல தனியார் விடுதியில் சபாநாயகம் எனும் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் வரை பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை: பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம் (35). இவர் நேற்று அதிகாலை 2.10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இன்று அறையை அவர் காலி செய்ய வேண்டியிருந்ததால், விடுதி ஊழியர்கள் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது,சுவிட்ச் ஆப் ஆகி இருந்துள்ளது. உடனே அறையின் மாற்றுச் சாவியை கொண்டு, ஊழியர்கள் திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது பாத்ரூம் அருகே இறந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் தகவல் கூறியதை தொடர்ந்து,அவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு இறந்து ஐந்து மணி நேரம் ஆகிறது என்று கூறியுள்ளனர்.



பின்னர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் வரை பணத்தை இழந்ததால், மனவேதனையில் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...