கோவை தேவராயபுரம் வனப்பகுதியில் கிடந்த 5 வயது குட்டி யானையின் எலும்புக்கூடுகள் - வனத்துறை விசாரணை!

கோவை தேவராயபுரம் வனப்பகுதியில் வனத்துறை ரோந்து பணியின் போது யானையின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர் குழுவுடன், வனத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இறந்தது சுமார் 5 வயதுடைய குட்டி ஆண் யானை என்பதும், இறந்து சுமார் 4 மாதங்கள் இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.


கோவை: கோவை தேவராயபுரம் வனப்பகுதியில் 5 வயது ஆண் குட்டி யானை மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை போளுவாம்பட்டி வனச்சரத்திற்கு உட்பட்ட நரசீபுரம் அருகே உள்ள தேவராயபுரம் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பகுதியில் இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் சிதறிய எலும்புகள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஊழியர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.



கால்நடை மருத்துவர் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, இறந்தது சுமார் 5 வயதுடைய ஆண் யானை குட்டி என்பதும், இறந்து சுமார் 4 மாதங்கள் இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டது.

யானையின் எலும்புக்கூடு, தந்தம் அதே பகுதியில் சிதறி கிடந்துள்ளது. இறந்து நீண்ட நாட்கள் ஆனதால் யானையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய முடியவில்லை என மருத்துவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...