உடுமலை அருகே நூற்பாலையில் தீ விபத்து - ரூ.40 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து நாசம்

உடுமலைப்பேட்டை அருகே உள்ள பாலப்பம்பட்டி அருகில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமானது.


திருப்பூர்: உடுமலை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பாலப்பம்பட்டி அருகில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு வெளியில் நூல் தயாரிப்பதற்கான மூலப்பொருளான கழிவு பஞ்சை பல அடுக்குகளாக அடுக்கி வைத்துள்ளனர்.



இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சில் தீ பிடித்தது. உடனே உடுமலைப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.



இந்த தீ விபத்தில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான கழிவுப்பஞ்சுகள் நாசமானது.



மேலும் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை ஆலைக்குள் பரவவிடாமல் துரிதமாக செயல்பட்டதால் ஆலைக்குள் இருந்த இயந்திரங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...