பொள்ளாச்சியில் தூய்மைப்பணியாளர்கள் வாழ்வுரிமை பேரணி - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் தமிழகத்தில் கலைஞர் அறிவித்த 6 மணி நேர வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.



பொள்ளாச்சி: உழைப்பாளர் தினத்தையொட்டி, பொள்ளாச்சியில் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார தூய்மை மற்றும் பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வுரிமை பேரணி நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முருகானந்தம் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி பேரணி, மத்திய பேருந்து நிலையம், வெங்கட்ராமன் வீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 200.க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்தப் பேரணியின்போது, திமுக அரசு கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி துறையில் உள்ள ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் 152, 139,111 அரசாணை வெளியிடப்பட்டது.



உடனடியாக தமிழக அரசு அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். உடனடியாக அந்தத் திட்டத்தை வாபஸ் பெற்று கலைஞர் அறிவித்த 6 மணிநேர வேலை திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...