வால்பாறையில் மே தின பொதுக்கூட்டம் - அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்பு!

வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கம் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் அனைத்து தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 450 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை: வால்பாறையில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கம் சார்பாக வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் மே தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிறுவனங்கள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நடைபாதை, கழிப்பிட வசதி, குடிநீர், குடியிருப்பு ரிப்பேர், மற்றும் நவீன மருத்துவ வசதி உடைய மருத்துவமனை அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



வால்பாறையில் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த மே தின பொதுக்கூட்டத்தில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் கையில் கொடியேந்தி பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து வரை சென்று மீண்டும் அஞ்சலகம் வரை சென்று வந்தனர்.



இந்த பேரணியில் CITU பொது செயலாளர் பரமசிவம், கண்ணில் கருப்பு துணி அணிந்து கலந்து கொண்டார். இதில் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 450 ரூபாய் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி மோகன், ஏ.என்.டி.யு.சி. கருப்பையா, சி.ஐ.டி.யு பரமசிவம், ஹச்.எம்.எஸ் மாணிக்கம், வி.டி.டி.எஸ் தர்மராஜ், ஐ.என்.பி.சி.டபிள்யூ அருணகிரி பாண்டி, ஏ.ஐ.டி.டி.யு எட்வர்ட், பி.டி.எம் செந்தில் முருகன், தே.ஆ.தோ சங்கம் ராஜேந்திரன், ஆகிய தொழிற்சங்க பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...