மே 1 உழைப்பாளர் தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் அலங்கியம் மற்றும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குடிநீர் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
திருப்பூர்: தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி குப்பு தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சிலம்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதேபோன்று கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகிராம சபைகூட்டம் குறிஞ்சி நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். இதில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் அரசு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன்,அங்கன்வாடி பணியாளர்கள், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,கல்வி துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சிலம்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அதேபோன்று கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகிராம சபைகூட்டம் குறிஞ்சி நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். இதில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் அரசு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன்,அங்கன்வாடி பணியாளர்கள், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,கல்வி துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.