தாராபுரம் அருகே ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் - அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதம்

மே 1 உழைப்பாளர் தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் அலங்கியம் மற்றும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குடிநீர் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி குப்பு தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சிலம்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



அதேபோன்று கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகிராம சபைகூட்டம் குறிஞ்சி நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். இதில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் அரசு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன்,அங்கன்வாடி பணியாளர்கள், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,கல்வி துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...