பல்லடத்தில் மின்கம்பம் அருகே கட்டப்படும் பொதுக் கழிவறை - விபத்து ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சம்!

பல்லடம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிவறை சிதிலமடைந்ததால், அதன் அருகே கட்டப்படும் புதிய கழிவறைக்கு மத்தியில் உள்ள உயரழுத்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் இல்லையென்றால், கழிவறையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே மின்கம்பத்திற்கு அருகே அமைக்கப்படும் பொதுக்கழிவறையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 41 வது வார்டு பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் பழைய கழிவறைக்கு அருகாமையில் புதியதாக கழிவறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், கழிவறையின் மத்தியில் உயரழுத்த மின்கம்பம் உள்ளதால், மின்கம்பத்தை அகற்றிவிட்டு கட்டிட பணி மேற்கொள்ளப்படாமல் மத்தியில் மின் கம்பம் இருப்பதோடு சேர்த்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது,

2022 ஆம் ஆண்டு வேறொரு இடத்தில் கழிவறை கட்டுவதற்கு பூமி பூஜை போட்ட நிலையில், அதனை தவிர்த்து தற்போது புதிய இடத்தில் கழிவறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

கழிவறைக்கு மத்தியில் உயர் அழுத்த மின்கம்பம் இருப்பதன் காரணமாக தண்ணீர் பயன்படுத்தக்கூடிய இடத்தில் மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படக்கூடிய பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதனை கவனத்தில் கொண்டு மின் கம்பத்தை அகற்ற வேண்டும் இல்லையெனில் கழிவறையை மாற்று இடத்தில் கட்ட வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...