பல்லடத்தில் மின்கம்பம் அருகே கட்டப்படும் பொதுக் கழிவறை - விபத்து ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சம்!

பல்லடம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிவறை சிதிலமடைந்ததால், அதன் அருகே கட்டப்படும் புதிய கழிவறைக்கு மத்தியில் உள்ள உயரழுத்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் இல்லையென்றால், கழிவறையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே மின்கம்பத்திற்கு அருகே அமைக்கப்படும் பொதுக்கழிவறையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 41 வது வார்டு பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் பழைய கழிவறைக்கு அருகாமையில் புதியதாக கழிவறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், கழிவறையின் மத்தியில் உயரழுத்த மின்கம்பம் உள்ளதால், மின்கம்பத்தை அகற்றிவிட்டு கட்டிட பணி மேற்கொள்ளப்படாமல் மத்தியில் மின் கம்பம் இருப்பதோடு சேர்த்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது,

2022 ஆம் ஆண்டு வேறொரு இடத்தில் கழிவறை கட்டுவதற்கு பூமி பூஜை போட்ட நிலையில், அதனை தவிர்த்து தற்போது புதிய இடத்தில் கழிவறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

கழிவறைக்கு மத்தியில் உயர் அழுத்த மின்கம்பம் இருப்பதன் காரணமாக தண்ணீர் பயன்படுத்தக்கூடிய இடத்தில் மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படக்கூடிய பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதனை கவனத்தில் கொண்டு மின் கம்பத்தை அகற்ற வேண்டும் இல்லையெனில் கழிவறையை மாற்று இடத்தில் கட்ட வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...