ஆலாந்துறை காமாட்சி அம்மன்கோயில் திருவிழா - வாண வேடிக்கைகளுடன் கோலாகலக் கொண்டாட்டம்!

கோவையில் ஆலாந்துறை காமாட்சி அம்மன் திருக்கோவில் 96ஆம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பெண் பக்தர்கள் பறவை அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கோவை: கோவை சிறுவாணி சாலை ஆலந்துறையில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரின் கோவிலான இங்கு 96 ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்தத் திருவிழாவை வான வேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க மிகப் பிரம்மாண்டமாக 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் கொண்டாடினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய கோவில் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.



கோமாரி பூஜை செய்யப்பட்டு இரவு சத்தி கரகம் எடுத்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் 501 பக்தர்கள் பூவோடு எடுத்தனர். மேலும், பறவை வாகனத்தில் அலகு குத்துதல், ஆணி கால் செருப்பு, பால்குடங்கள் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.



இதைத் தொடர்ந்து, நடைபெற்ற வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதைத் தொடந்து மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி எடுப்பும், இறுதி நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...