கோவையில் மழைநீர் கூடுதல் வடிகால் அமைக்கும் திட்டம் - ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் கூடுதல் மழைநீர் வடிகால்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரயில் நிலையம் அருகில் உள்ள லங்கா கார்னர் பகுதியில் மழைக்காலங்களில் அதிக அளவிலான மழை நீர் தேங்கி போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படும் நிலை இருந்துவருகிறது.



இந்நிலையில்,அப்பகுதியில் கூடுதலாக மழை நீர் வடிகால் கட்டுவது, கழிவு நீர் தொட்டி அமைத்து அதிவேக மோட்டார் பொருத்தி கழிவு நீரை வெளியேற்றுவது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தேவையான கட்டுமான பணிகளை உடனடியாக துவங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...