விளைநிலங்களை சேதப்படுத்தும் மக்னா காட்டு யானை - பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி அடுத்த சரளபதியில் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வரும் மக்னா காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விட வலியுறுத்தி, வேட்டைக்காரன் புதூர் பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் மக்னா காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி வேட்டைக்காரன் புதூர் பகுதியில் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடித்துக் கொண்டு வரப்பட்ட மக்னா காட்டு யானை வால்பாறை வனசரகம் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.

54 நாட்கள் கழித்து பொள்ளாச்சி வனச்சரகம் சரளபதி பகுதியில் மக்னா யானை முகாமிட்டு கடந்த 25 நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தியும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வந்தது.

இதனையடுத்து அந்த யானை விவசாய தோட்டத்துக்கு வராமல் இருக்க டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து சின்னத்தம்பி, முத்து, ராஜவரதனன் என மூன்று கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

ஆனால் வனத்துறைக்கு போக்கு காட்டிய மக்னா இரவு நேரத்தில் வெளியேறி மூன்று கும்கி யானைகளுடன் நட்பாக பழகி கும்கி யானைகளுக்கு வைக்கப்படும் உணவுகளை உட்கொண்டு சுற்றி திரிந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த கும்கி யானைகளை வனத்துறையினர் மீண்டும் டாப்ஸ்லிப் வளர்ப்பு முகாமுக்கு திரும்ப கொண்டு சென்றனர்.



ஆனால் மக்னா யானை தற்போது மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி விலை நிலங்களை சேதப்படுத்தியும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படுவதற்குள் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், மேலும் வனத்துறை அலட்சியத்தை கண்டித்து சரளபதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்டைக்காரன்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்னா யானையை விரைந்து பிடித்து வன பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தியும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தமிழக அரசும் வனத்துறையும் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...