திருப்பூரில் காவல்துறைக்கு புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் - மாவட்ட எஸ்.பி சசாங் சாய் துவங்கி வைத்தார்!

திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக புதிதாக இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.பி சசாங் சாய் கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களை பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் காவல்துறையினருக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விரைவாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்லும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான அவிநாசி, ஊத்துக்குளி, ஊதியூர் உள்ளிட்ட 12 காவல் நிலையங்களுக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த புதிய ரோந்து இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி எழுப்பக்கூடிய நவீன இயந்திரங்கள் மற்றும் ஸ்பீக்கர், மைக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...