வால்பாறையில் 2வது நாள் கோடை விழா - அலைமோதிய மக்கள் கூட்டம்!

வால்பாறையில் கடந்த 26ஆம் தேதி கோடை விழா கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் 2வது நாளான நேற்று நாய்கள் கண்காட்சி, மலர் கண்காட்சி, பரதநாட்டியம், பட்டிமன்றம் இசை நிகழ்ச்சி பாரா கிளைடிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தொடங்கி வைத்தார்.

கோவை: வால்பாறையில் 2 நாள் கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி, மலர் கண்காட்சி, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த கோடை விழாவின் 2வது நாளான நேற்று, நாய்கள் கண்காட்சி, மலர் கண்காட்சி, பரதநாட்டியம், பட்டிமன்றம் இசை நிகழ்ச்சி பாரா கிளைடிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய கோடை விழா நிகழ்ச்சியானது, முதலாவதாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கு பெற்றன.

இந்நிகழ்ச்சியை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் மற்றும் ஆணையாளர் வெங்கடாசலம் ஆகியோர் துவங்கி வைத்தனர். நாய்கள் கண்காட்சியில் முதலிடம் பிடித்த ஜெர்மன் ஷெப்பர்ட் உரிமையாளர் சுபாஷ், இரண்டாம் இடம் பிடித்த லேபர் ரெட்டிவர் காவியன், மூன்றாம் இடம் பிடித்த புள்ளி கூட்டான், காமராஜ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



அதை தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து வருகை தந்த பரதநாட்டிய குழுவினர்கள் பரத நாட்டிய நடனம் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர். 



அதன் பின்பு அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாரா கிளைடிங் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்,



இதனையடுத்து மாலையில் நடைபெற்ற யோனாவின் மேஜிக் ஷோ நிகழ்ச்சிகளை பொது மக்கள் அனைவரும் கண்டு கழித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...