சென்னை சூப்பர் கிங்ஸ் தான் எனக்கு பிடித்த அணி - சத்குரு பேசும் வீடியோ மீண்டும் வைரல்!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதும் நிலையில், தனக்குப் பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் ஃபீவர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈஷா யோகா மைய நிறுவன சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது விருப்பமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸை ஆதரிக்கும் பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி உள்ளது.

இந்தக் காணொளியில், மேற்கிந்திய கிரிக்கெட்டின் அடையாளமான ‘தி யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல் சத்குருவிடம், “உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது?” என்று கேட்கிறார். சத்குரு தனக்கே உரித்தான வெடிச்சிரிப்புடன், “நிச்சயமாக சென்னை அணிதான்,” என்கிறார்.

KKR அணியினர் தனது ஆசிகள் வேண்டி தன்னை நாடிய ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பற்றி சத்குரு சொல்லும்போது, “கடந்த முறை KKR அணி இறுதிப் போட்டியில் இருந்தபோது, அவர்கள் என்னை அழைத்து, சத்குரு, நீங்கள் எங்கள் அணியை ஆசீர்வதிக்க வேண்டும் என்றனர்.

அப்போது யாருக்கு எதிராக விளையாடுகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு அவர்கள், ‘சென்னை அணிக்கு எதிராக’ என்றார்கள். நான் சொன்னேன், ‘அப்படியென்றால், இது ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியாது,” என்றேன் என சத்குரு சொல்ல., கெய்லும் சத்குருவும் சிரிக்கின்றனர்.

வீடியோவின் இறுதிப் பகுதியில், ஐபிஎல்-லில் கண்டிப்பாக ‘சென்னை தான் நம்பர் ஒன் டீம்’ என்று கிறிஸ் கெய்ல் கருத்துத் தெரிவிக்கிறார், அதற்கு சத்குரு, ‘தோனி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார்.

தற்போதைய ஐபிஎல் சீசனில், சத்குரு RCB மற்றும் CSK அணிகளை உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது.

இந்த நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...