மதிமுகவில் இருந்து விலகினார் துரைசாமி!

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுங்கள் என வைகோவுக்கு கடிதம் எழுதிய மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும், திமுகவுக்கு தனது ஆதரவு என்றும், தான் எந்த கட்சியிலும் இணைய போவதில்லை எனவும் கூறியுள்ளார்.


திருப்பூர்: மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மதிமுகவின் அவைத்தலைவர் துரைசாமி அறிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் மதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அண்மை காலமாக துரை வைகோவின் வருகைக்குப் பிறகு அதிருப்தியில் இருந்த மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கடந்த மாதம் மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள் என வைகோவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுகவின் அவைத் தலைவர் துரைசாமி பேசியதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

திமுகவுக்கு எனது ஆதரவை மட்டும் அளிக்கிறேன். எந்த கட்சியிலும் இணைய போவதில்லை. எனது தொழிற்சங்கத்தை தொடர்ந்து நடத்த இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...