கோவையில் தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய ஊழியர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடியதாக அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சந்தோஷ்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.




கோவை: கவுண்டம்பாளையம் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கவுண்டம்பாளையம் அடுத்த டிவிஎஸ் நகர் சாலையில் உள்ளது காவேரி குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவாக பணிபுரிந்து வருபவர் சந்தோஷ் குமார்.

இவர் நேற்று இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திடமான வகையில் நின்று கொண்டிருப்பதை பார்த்த நிறுவன பொருப்பாளர் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளார்.

அப்போது அதில் 6 பால் வால்வுகள் திருடி மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...