நவக்கரை அருகே இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை!

நவக்கரை அருகேயுள்ள வனப்பகுதியில் மற்றொரு விலங்குடன் நடந்த சண்டையில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்த நிலையில், உடலை கைப்பற்றிய வனத்துறையினர் மருத்துவ குழுவினர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்த பின் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் நவக்கரை அருகே சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை அடுத்த அட்டமலை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை வனத்துறை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து இறந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இறந்த சிறுத்தை சுமார் 1.5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பதும், வேறு ஒரு வனவிலங்குடன்ஏற்பட்ட மோதலில் சிறுத்தையின் பின்பகுதியில் கடித்து இழுத்ததில் குடல் வெளியே வந்து உயிரிழந்தது தெரியவந்தது.



மேலும் சிறுத்தையின் உடலில் ஆங்காங்கே வேறு விலங்கின் நகத்தடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து இறந்த சிறுத்தை உடல் அதே அதிகாரிகள், வன ஆர்வலர்கள் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...