சர்வதேச நீதி நாள் - உடுமலை பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்!

சர்வதேச நீதிநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் M.மணிகண்டன் மற்றும் K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சட்ட உதவி மைய சேவைகளை பெறுவது குறித்து எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: சர்வதேச நீதி நாளை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையத்தில் வட்டசட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நேற்றைய தினம் (17.07.2023) "சர்வதேச நீதிநாள்"-ஐ முன்னிட்டு உடுமலைப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியான, M.மணிகண்டன் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி, K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே இலவச சட்ட உதவி மையத்தின் சேவைகள் மற்றும் மக்கள் அதை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.



இதில் வழக்கறிஞர்கள், அப்துல்நாசர், செந்தில்குமார், மகேஸ்வரன், சத்தியவாணி, தம்பிபிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை சட்டம் ஒழுங்கு உதவி காவல் ஆய்வாளர்கள், சிவராஜ், தங்கவேல் பிற காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சட்ட சேவைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...