மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையம் எதிரே மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆடைகளை அகற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று மனித உரிமை மீறல் செயலை தடுக்க தவறிய இன வெறியை ஊக்குவிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள காமராஜ் பவனில் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி மாவட்ட நிர்வாகிகள், டிவிஷன் தலைவர்கள் இளைஞர் அணியினர், வழக்கறிஞர் அணியினர் மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...