தாராபுரத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு - அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் 12 சென்ட் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தாராபுரம் அருள்மிகு காடு அனுமந்தராயர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 10.98 ஏக்கர் நன்செய் நிலம் தாமாக முன் வந்து ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், கோனாபுரம் அருள்மிகு லட்சுமி நாராயணசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 2.14 ஏக்கர் நன்செய் நிலம், தனி நபரிடம் இருந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.



இந்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமர துரை உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெய தேவி தலைமையில், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டது.



இதன்படி, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 ஏக்கர் 12 சென்ட் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் மகேஸ்வரன், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் குருராஜன், தாராபுரம் சரக ஆய்வாளர் ஆதிரை, செயல் அலுவலர் மல்லிகா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் இணைந்து தாராபுரம் நகரில் 13 ஏக்கர் 12 சென்ட் நிலம் திருக்கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...