தாராபுரத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு - அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் 12 சென்ட் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தாராபுரம் அருள்மிகு காடு அனுமந்தராயர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 10.98 ஏக்கர் நன்செய் நிலம் தாமாக முன் வந்து ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், கோனாபுரம் அருள்மிகு லட்சுமி நாராயணசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 2.14 ஏக்கர் நன்செய் நிலம், தனி நபரிடம் இருந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.



இந்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமர துரை உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெய தேவி தலைமையில், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டது.



இதன்படி, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 ஏக்கர் 12 சென்ட் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் மகேஸ்வரன், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் குருராஜன், தாராபுரம் சரக ஆய்வாளர் ஆதிரை, செயல் அலுவலர் மல்லிகா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் இணைந்து தாராபுரம் நகரில் 13 ஏக்கர் 12 சென்ட் நிலம் திருக்கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...