குடும்ப தகராறில் 3 வயது குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் - பரபரப்பு!

கோவை செட்டிபாளையம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கையில் 3 வயது குழந்தையுடன் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில், போலீசார் எட்டு மணி நேரமாக போராடி அவரையும் குழந்தையும் சமாதானம் செய்து பத்திரமாக மீட்டனர்.


கோவை: செட்டிபாளையம் அருகே குடும்பத்தகராறில் 3 வயது குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கோவை செட்டிபாளையம் எம்.ஆர் நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகறாரு இருந்து வந்துள்ளது.

இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு கணவன் - மனைவி பிரச்சினையில் தனது தாய் வீட்டிற்கு சென்ற மனைவி காளீஸ்வரியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி செட்டிபாளையம் பகுதியிலுள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த செல்வத்தை பல மணி நேரம் போராடி மீட்ட காவல்துறையினர் இருவரையும் சேர்த்து வைத்தனர்.

தொடர்ந்து கணவன் - மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காளீஸ்வரி மீண்டும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த செல்வம் நேற்று மாலை தனது குழந்தைகளை பார்ப்பது போல் காளீஸ்வரியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மூன்று வயது மகனை தூக்கி கொண்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள சுமார் 250 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரத்தில் ஏறி தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் நின்று மிரட்டல் விடுத்த செல்வத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் சமாதானத்தை ஏற்க மறுத்த செல்வமோ, தனது சொந்த ஊரான சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் இன இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து தனது குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் அப்போதுதான் தான் கீழே இறங்குவேன் என கூறி கோபுரத்தின் மீது குழந்தையுடன் அமர்ந்து கொண்டார்.

நேற்று மாலை 5 மணிக்கு செல்போன் கோபுரத்தில் ஏறிய அந்த நபர் காவல்துறையினர், பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் என பலரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போதும் இறங்காமல் அங்கேயே இருந்தார்.

நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அங்கு வந்த அவரது மனைவி காளீஸ்வரி இனிமேல் சேர்ந்து வாழ்வேன் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் குழந்தையுடன் கீழே இறங்கினார் போதை ஆசாமி செல்வம்.

இதை அடுத்து குழந்தையுடன் அந்த நபரை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் வாகன மூலம் இருவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி, செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த செல்வம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...