கோவையில் அழகுசாதன பொருட்கள் கடையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு மளமளவென பரவிய நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.


கோவை: கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

கோவை கிராஸ்கட் ரோடு, ராஜாஜி சாலையில் உள்ள காஸ்மெட்டிக் கடை ஒன்றின் கீழ் தளத்தில் அதிகாலை 4 மணியளவில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி தலைமையிலான கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



சிறிது நேரத்தில் கடையின் முதல் தளத்திலும் தீ பரவியதால், மீண்டும் பணிகள் துரிதபடுத்தப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இச்சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...