மீன் வாங்கினால் தக்காளி இலவசம் - வாடிக்கையாளர்களை கவரும் மீன் கடை!

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வரும் ஜாபர் என்பவர் தனது கடைக்கு மீன் வாங்குவோர்க்கு கால் கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். இந்த சலுகை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இது இன்றும் நாளையும் மட்டுமே கிடைக்கும் என அறிவித்துள்ளார்.


கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கினால் தக்காளி இலவசமாக கிடைக்கும் என்று ஜாபர் என்பவர் அறிவித்துள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து மீம்ஸ் மற்றும் காமெடி பதிவுகளை வலைதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கூட மணமக்களுக்கு தக்காளி அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து வருவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளியை அரசாங்கமே நேரடியாக கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.



இந்நிலையில் கோவையில் மீன் கடை நடத்தி வருபவர் அவரது கடையில் மீன் வாங்குவோர்க்கு இலவசமாக கால் கிலோ தக்காளியை வழங்கி வருகிறார். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இன்றும், நாளையும் மீன் வாங்குபவர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுப்பதாகவும் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...