ஆயுதப்படை காவலரின் முயற்சியால் கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் பாபு என்பவரின் முயற்சியின் காரணமாக சக காவலர்கள் உதவியுடன், உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மூலம் கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு பணிகள் இன்று துவங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் பாபு, அரசு கலைக் கல்லூரியுடன் இணைந்து கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட ஆயுதப்படை பணியாற்றும் முதல் நிலை காவலர் பாபு தன்னுடன் பணியாற்றும் காவலர்கள், உதவும் கரங்கள் குழு மூலமாக அரசு கலைக் கல்லூரியில் பயிலும் அரசியல் துறை மாணவர்களுடன் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



கோவை அரசு கலைக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின் காவலர் பாபு கூறியதாவது,

கோவையில் ஒரு கோடி மரங்களை நடவுள்ளோம். முதற்கட்டமாக கோவை அரசு கலைக் கல்லூரியில் 300 மரங்கள் நடப்பட்டுள்ளது. குக் கிராமம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஆக்சிஜன் அதிகம் கொடுக்கும் மரங்கள் மற்றும் நிழல் தரவுள்ள மரங்களை நடவு செய்ய உள்ளோம்.

இந்த நிகழ்வில் காவலர் குழு மற்றும் லைன்ஸ் கிளப் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். முக்கியமாக மூங்கில், இயல்வாகை, புங்கமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...