அலங்கியம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு!

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில், மாணவ மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் அலங்கியம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில், வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் தாராபுரம் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உளவியல் ஆலோசகர் கௌதம் நடராஜன், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புகை மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை குறித்து தெளிவாக விளக்கி கூறினார்.



மேலும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் பயன்படுத்துபவரின் உடல் நலம் மட்டும் கெடாமல் தன்னை சுற்றி இருப்பவர்களின் உடல் நலம் பாதிப்படையும். எனவே புகையிலை மற்றும் போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க மாணவ மாணவியர்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.



வட்ட சட்டை பணிக்குழு தலைவரும் தாராபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான தர்ம பிரபு கூறுகையில்:- சட்டம் என்றால் என்ன என்பதையும், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் மாணவ மாணவியர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் மிகவும் தெளிவாக எடுத்து கூறினர்.



அலங்கியம் காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் கூறுகையில் இன்றைய இளைய சமுதாயம் அழிந்து வருவதற்கு காரணம் போதை பொருட்கள் மட்டுமே எனவே புகையிலை மற்றும் போதைப் பொருள் இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்க மாணவ மாணவியர்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வட்ட சட்டை பணிக்குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான தர்ம பிரபு, உளவியல் ஆலோசகர் கௌதம் நடராஜன்,அலங்கியம் காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன், அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொண்ணு சாமி, ஆசிரியர்கள் அழகர்சாமி, முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து நிகழ்ச்சியில் கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...