கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநர் - சொந்த ஊரில் பணியிட மாறுதல் வழங்க ஆணை

கோவையில் மனைவி உயிரிழந்து விட்டதால் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சொந்த ஊரிலே பணி வழங்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் மனு வழங்கினார். இதனையேற்று மறுநாளே அவருக்கு பணியிட மாறுதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கோவை: கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்து பணியிட மாறுதல் கோரி மனு வழங்கிய ஓட்டுநருக்கு கோரிக்கை வைத்த மறுநாளே பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

கோவை சுங்கம் பகுதியில், உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்று போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார். அப்போது மேடைக்கு வந்த ஓட்டுநர் கண்ணன், தனது மனைவி இறந்து விட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமான கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்து, தனது சொந்த ஊரான தேனியிலேயே பணியிட மாறுதல் வேண்டுமென்ற கோரிக்கை மனுவை வழங்கினார்.

கைக்குழந்தையுடன் ஓட்டுனர், அமைச்சரின் காலில் விழுந்த நிகழ்வு மேடையில் இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் அவரது கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டு அவருக்கு அவரது சொந்த ஊரிலே பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கண்ணன் நாளை பெற்று கொள்கிறார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...