கோவையில் மாநகர காவல் ஆணையர் தலைமையில்  போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்!

ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்ற போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுபடுத்துவதற்கான கூட்டத்தில் மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.


கோவை: மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனதலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 145 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.முதலமைச்சர் கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து காவல்துறை மூலமாகவும். பல்வேறு துறைகளின் மூலமாகவும் துரித நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு, பல்வேறு துறைகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிகளில் உள்ள கழிவறைகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் இதர இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு. போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து ஆராய வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் எதிர்காலம் சிறக்கவும், அவர்கள் ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைக்கவும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, மாணவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பெற்றோர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். மேலும், போதை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த கவுன்சிலிங் வழங்கவும். உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க காவல்துறையும் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் தயாராக உள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவது குறித்து தயக்கமின்றி உண்மையான தகவல்களை காவல்துறைக்கு ஆசிரிய பெருமக்கள் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...