திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் - அத்தப்பூ கோலமிட்டு மாணவிகள் நடனம்

கேரள மக்களின் வசந்தகாலமான ஓணம் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு, பாடலுக்கு ஏற்றவாறு மாணவியர் நடனமாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: மாணவிகள் கேரள சேலை அணிந்து ஓணம் திருநாளை வரவேற்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஒருவொருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

கேரள மக்களி்ன் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. பெரும்பாலான கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வசிப்பதால் இங்கும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூரிலும் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது சிறப்பாக நடைபெற்றது.

மாணவிகள் கேரள சேலை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.



மேலும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணம் பண்டிகைக்காக திருப்பூரில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...