அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியார் உருவபொம்மை எரிப்பு!

சனாதன சர்ச்சை தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்ய சாமியாரை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், அவரது உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.



கோவை: அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரின் உருவ பொம்மை எரித்து வால்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நகரச் செயலாளர் சுதாகர் தலைமையில், நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்ய சாமியாரின் உருவ பொம்மை எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.



வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற திமுகவினரின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...