தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கேட்டுகொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கடந்து 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பத்தாயிரம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அவர்களை பணி நியமனம் செய்யப்பட்டது.
இதில் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பணி ஆபத்து பணி என்பதால் அவர்களுக்கு கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.