தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர்: தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாளையொட்டி, தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் செப்டம்பர் 11ஆம்தேதி இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக தாராபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜ சோழன் தலைமை தாங்கினார். தாராபுரம் மேற்கு தெரு சீராம்பாளையம், வீராட்சி மங்கலம், தாவாய்பட்டிணம், கரையூர், ஆகிய இடங்களிலும் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.