கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கோதுமை மாவில் விநாயகர் சிலையை செய்து அசத்தினர்.
கோவை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தனியார் கல்லூரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பழங்கள், கோதுமை மாவு, பேப்பர் கூழ், சாத்துக்குடி பழங்களில் விநாயகர் சிலைகளை செய்தனர்.
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள நேரு கலைகல்லூரியில் படிக்கும் மாணவர்களின் சுற்று சூழல் மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களிடம் சூழல் பாதிப்பு இல்ல விநாயகர் சிலை தயாரிப்பு போட்டி நடைபெற்றது.
இதில் 30க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
களிமணில் தொடங்கி பழங்கள், கோதுமை மாவு, பேப்பர் கூழ், சாத்துக்குடி பழங்களில் சிறப்பாக விநாயகர் சிலைகளை தயாரித்து அசத்தினர்.