உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் உள்ள தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் இரவு பகலாக கனிம வளங்கள் திருட்டு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர்: ஆதாரங்களுடன் புகார் அளித்தும் கனிம வளக்கொள்ளை உறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு பகலாக கனிம வளங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் வருவாய்த்துறையினருக்கு தகுந்த ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தாலும் வருவாய்த் துறையினர் கனிமவள கடத்தலை தடுக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் சில தினங்களில் விவசாயிகள் ஓன்று திரண்டு கனிமவள கடத்தலுக்கு துணை போகும் வருவாய்த் துறையினரை கண்டித்து உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பல லட்சம் மதிப்பிலான கனிம வளங்கள் திருடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.