வருவாய்த்துறை அலட்சியம் - உடுமலையில் பட்ட பகலில் கனிம வளங்கள் திருட்டு

உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் உள்ள தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் இரவு பகலாக கனிம வளங்கள் திருட்டு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.



திருப்பூர்: ஆதாரங்களுடன் புகார் அளித்தும் கனிம வளக்கொள்ளை உறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு பகலாக கனிம வளங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் வருவாய்த்துறையினருக்கு தகுந்த ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தாலும் வருவாய்த் துறையினர் கனிமவள கடத்தலை தடுக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் சில தினங்களில் விவசாயிகள் ஓன்று திரண்டு கனிமவள கடத்தலுக்கு துணை போகும் வருவாய்த் துறையினரை கண்டித்து உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த சில தினங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பல லட்சம் மதிப்பிலான கனிம வளங்கள் திருடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...