வருவாய்த்துறை அலட்சியம் - உடுமலையில் பட்ட பகலில் கனிம வளங்கள் திருட்டு

உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் உள்ள தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் இரவு பகலாக கனிம வளங்கள் திருட்டு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.



திருப்பூர்: ஆதாரங்களுடன் புகார் அளித்தும் கனிம வளக்கொள்ளை உறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு பகலாக கனிம வளங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் வருவாய்த்துறையினருக்கு தகுந்த ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தாலும் வருவாய்த் துறையினர் கனிமவள கடத்தலை தடுக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் சில தினங்களில் விவசாயிகள் ஓன்று திரண்டு கனிமவள கடத்தலுக்கு துணை போகும் வருவாய்த் துறையினரை கண்டித்து உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த சில தினங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பல லட்சம் மதிப்பிலான கனிம வளங்கள் திருடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...