தாராபுரம் அமராவதி ஆற்றில் முதல் கட்டமாக 40 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி முதற்கட்டமாக 40 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதை முன்னிட்டு தாராபுரம் டிஎஸ்பி கலையரசன் தலைமையில் நகரம் முழுவதும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி முதற்கட்டமாக 40 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் விஜர்சன ஊர்வலம் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து மக்கள் கட்சி அமைப்பு சார்பில் நடந்தது.



இந்து மக்கள் கட்சியினர் தாராபுரம் நகர வீராட்சிமங்கலம், தளவாய்பட்டிணம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்திய 29 விநாயகர் சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டது. பின்னர், தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை ரவுண்டானா பகுதியில் அணிவகுத்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து மதியம் 1 மணி அளவில் இமக மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சஷ்டி சேனா இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி பேரணியை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி சாலை வழியாக வழியாக போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அமராவதி ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு சிலைகளாக பெற்று தீயணைப்பு துறையினர் கரைத்து விஜர்சனம் செய்தனர். இதேபோல, தாராபுரம் நகர ஒன்றிய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில்11 சிலைகளையும் தாராபுரம் உடுமலை சாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.



இதையடுத்து கிராம கோயில் பூஜாரிகள் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரசாமி தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அமராவதி ஆற்றுங்கரையை அடைந்தனர்.



இதையடுத்து, 11 சிலைகளுக்கும் அங்கு சிறப்பு பூஜை செய்து போலீசார் முன்னிலையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், தலைமையில் அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகளை வீரர்கள் மாலை 4 :30 மணி அளவில் கரைத்தனர். இதனை முன்னிட்டு தாராபுரம் டிஎஸ்பி கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உட்பட நகரம் முழுவதும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...